தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
May 25 2020 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த இருதினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 19 மாவட்டங்களில், அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, கரூர், வேலூர், ஈரோடு, ராணிப்பேட்டை மற்றும் திருத்தணியில் 104 டிகிரி முதல் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு அனல்காற்று வீசும் என்பதால், பகல் 11.30 மணி முதல், பிற்பகல் 3.30 மணி வரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.