ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்
May 25 2020 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், பசித்திருத்தலின் மூலம் மனதையும், உடலையும் தூய்மைப்படுத்துவதற்காக நோன்பிருந்து, பகிர்ந்து கொடுப்பதன் மகிழ்ச்சியை உலகிற்குச் சொல்லும் வகையில் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுத்து, எல்லாம் வல்ல இறைவனை வணங்கி இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் புனித ரமலானைக் கொண்டாடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்னாளில் மனித குலம் எதிர்கொண்டிருக்கிற பெருந்துயரில் இருந்து அனைவரும் மீண்டிட இறைவனைப் பிரார்த்திப்போம் - வலிமையோடும், நலன்களோடும் எல்லோரும் எழுந்திடுவதற்கான நம்பிக்கையை நம்மைச் சுற்றியிருக்கிற ஒவ்வொருவருக்கும் விதைப்போம் - இறைதூதர் நபிகள் நாயகம் போதித்த மனித நேயம், ஈகை, கோபம் தவிர்த்தல் உள்ளிட்ட உயர்பண்புகளின் வழியாக தலைசிறந்த மனித சமுதாயத்தை உருவாக்கிட புனித ரமலானில் அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ள திரு.டிடிவி தினகரன் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பெருநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.