கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதிய வகை எலக்ட்ரானிக் முகக் கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி கண்டுபிடிப்பு
May 20 2020 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், புதிய எலக்ட்ரானிக் முகக் கவசத்தை கண்டுபிடித்துள்ளார்.
குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் வசிக்கும், முன்னாள் ராணுவ உயரதிகாரி கர்னல் ராமகிருஷ்ணன் பிள்ளை, தனது மனைவி கனகலதா உடன் இணைந்து, ரெஸ்பிரேட்டருடன் கூடிய எலக்ட்ரானிக் ஃபில்டர்களை பயன்படுத்தி, கொரோனா தடுப்பு முகக் கவசத்தை தயாரித்துள்ளார். விமானப்படை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் பயன்படுத்தும் வகையில், இந்த முகமூடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் உயிர் இழக்கும் வகையில் இந்த மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.