ஊரடங்கு உத்தரவு விற்பனையின்றி தேங்கிக்கிடக்கும் வெள்ளரிப் பிஞ்சுகள் : மாடுகளுக்கு உணவாக போடும் அவலம்
Apr 9 2020 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரம்பலூரில், வயலில் விளைவிக்கப்பட்ட வெள்ளரிப் பிஞ்சுகளை விற்க முடியாமல் மாடுகளுக்கு உணவாக போடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளரிப்பிஞ்சு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கோடைகாலத்திற்கு ஏற்ற இயற்கையான குளிர்ச்சியைத் தரக்கூடிய வெள்ளரிப் பிஞ்சுகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்குவதால் அவர்களுக்கு நாள்தோறும் போதிய வருமானம் கிடைக்கும். தற்போது கொரோனோ ஊரடங்கு உத்தரவால் வயலில் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளரிப் பிஞ்சுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். வெள்ளரி பிஞ்சுகள் வயலிலேயே முடக்கப்பட்டிருப்பதால், அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகள், உள்ளூர் கிராம மக்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்ட வெள்ளரி பிஞ்சுகள், விற்பனை செய்யமுடியாததால், வாங்கிய கடனுக்கு வட்டி கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.