திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு காவல்துறை சார்பில் மரியாதை
Apr 9 2020 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தீவிரமாக பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு, நெல்லை மாநகராட்சி காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, நெல்லை மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.