தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களிலேயே, அதிகபட்சமாக, சென்னையில் 156 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 156 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 60 பேருக்கும், திண்டுக்கல்லில் 46 பேருக்கும், திருநெல்வேலியில் 40 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு நோய்த்தொற்று உள்ளோரின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில், 36 பேருக்கும், நாமக்கல்லில் 33 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது.
ராணிப்பேட்டையில் 27 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூரில் 23 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 22 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், தலா 13 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில், 12 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர், தஞ்சை, நாகை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில், தலா 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 பேருக்கும், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 5 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா இருவருக்கும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.