காரைக்குடியில் ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு 5 நிமிடம் உறுதிமொழி ஏற்க வைத்த காவல்துறையினர்
Apr 8 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு, காவல்துறையினர் 5 நிமிடம் உறுதிமொழி ஏற்க வைத்தனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 24 ஆம் தேதி மாலை முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தமிழக காவல் துறையினர் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காரைக்குடியில் ஊரடங்கை மீறி வாகனங்களில் உலா வந்தவர்களை, காவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான போலீசார், கையில் விழிப்புணர்வு பதாகைகளை கொடுத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர். காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.