கொரோனா அதிகம் பாதித்த தமிழகத்திற்கு மத்திய அரசு குறைந்த நிதியை ஒதுக்கியது ஏன்? - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Apr 8 2020 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாநிலங்களில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கியது ஏன் என 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், இந்த நிதி போதுமானதாக இருக்காது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏன் குறைவாக ஒதுக்கியது என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.