தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,200 பேர் கைது - 1000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
Apr 8 2020 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், 144 தடை உத்தரவினை மீறியதாக, இதுவரை ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி, இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் கொரோனா குறித்து நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 9 நாட்களில், சாலைகளில் சுற்றியதாக, ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.