தமிழகத்தில் விற்பனை ஆகாத அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மாற்றும் நடவடிக்கை - சுகாதாரத்துறை புதிய முயற்சி
Apr 8 2020 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் விற்பனை ஆகாமல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில், தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை, தனிமை முகாம்களில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் வாரங்களில், தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகள் ஆகியவற்றின் தேவை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதால், முன்னேற்பாடு பணிகளை, அரசு முடுக்கி விட்டுள்ளது.
இதற்காக, கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை சுகாதாரத்துறை ஆய்வுசெய்து வருகிறது. மேலும், கட்டி முடிக்கப்பட்டு, விற்பனையாகாமல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை, தனிமை முகாம்கள் மற்றும் சிறப்பு வார்டுகளாக மாற்றுவது குறித்தும் அரசு ஆய்வுசெய்து வருகிறது. 100 சதவீத வீடுகளும் விற்காமல் அல்லது ஒப்படைக்கப்படாமல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டண நிறுவனங்களுடன், சுகாதாரத்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.