கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தூத்துக்குடி மீனவர்கள் வேதனை - மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.10,000 உயர்த்தி தர அரசுக்கு கோரிக்கை
Apr 6 2020 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கு உத்தரவால் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருக்கும் மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்க, தூத்துக்குடி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கோரோனா தொற்று நோய் பரவாமல் இருக்கும் வகையில், வரும் 14-ம் தேதி வரை அரசு உரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில், நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும், சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வருகின்றனர்.