மக்கள் நடமாட்டம் இல்லாததால் ஊருக்குள் புகுந்து வாழை தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள் - லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் நஷ்டஈடு கோரும் விவசாயிகள்
Apr 6 2020 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், அதனை பயன்படுத்திக் கொண்ட காட்டு யானைகள், விளைநிலங்களில் புகுந்து ஆயிரக்கணக்கான வாழை மரங்களை சேதப்படுத்தின.
கூடலூரை அடுத்துள்ள எழுமரம் பகுதியில், விவசாயிகள் தங்களது தோட்டங்களில் நேந்திரன், வாழை பயிரிட்டுள்ளனர். இவை, அடுத்த மாதம் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருந்தன. தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு காரணமாக, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட காட்டு யானைகள், இன்று அதிகாலை வாழை தோட்டத்திற்குள் புகுந்து, ஆயிரக்கணக்கான வாழை மரங்களை சேதப்படுத்தின. இதனால், பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ள விவசாயிகள், அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.