கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முதியோர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கிய தன்னார்வலர்கள்
Apr 6 2020 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் முடங்கியுள்ள முதியோர்களுக்கு, தன்னார்வலர்கள் சிலர் முகக்கவசம் மற்றும் சானிடைசர்களை வழங்கினர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உணவு, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தன்னார்வலர்கள் சிலர், வில்லிவாக்கம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில், முதியோர்களுக்கு முககவசம், சேனிடைசர், பிரட் ஆகியவற்றை வழங்கினர்.