கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்தூட் ஃபின் கார்ப் பைனான்ஸ் கிளையில் கொள்ளை முயற்சி - 'அலாரம்' ஒலித்ததை அடுத்து கொள்ளையர்கள் 'எஸ்கேப்'
Feb 21 2020 9:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காட்டில், முத்தூட் ஃபின் கார்ப் பைனான்ஸ் கிளையில், கொள்ளையடிக்கும்போது அலாரம் ஒலித்ததால், கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இந்த நிறுவனத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைய முயன்றபோது, அலாரம் ஒலித்ததால் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, தக்கலை டி.எஸ்.பி., நேரில் விசாரணை நடத்தினார். மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.