சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக்கிடங்கில் தீப்பற்றி புகைமூட்டம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி
Feb 21 2020 9:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கொடுங்கையூரில் உள்ள, மாநகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பைகள் எரிந்து புகைமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்து அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், மணலி சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனர். மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.