திருச்சி அருகேயுள்ள இருங்களூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : 600 காளைகள் - 400 இளைஞர்கள் பங்கேற்பு

Feb 21 2020 7:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி அருகேயுள்ள இருங்களூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் அடக்‍கினர்.

சமயபுரம் அடுத்த இருங்களூர் பகுதியில், புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்‍கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 600-க்‍கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. போட்டியில் 400 இளைஞர்கள் கலந்து கொண்டு, காளைகளை அடக்‍க முயன்றனர். காளைகள், வீரர்களிடம் பிடிபடாமல் லாவகமாக சென்ற காட்சியை, பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். இளைஞர்கள் பலர் காளைகளை அடக்‍கியபோது, கூடியிருந்த கிராம மக்‍கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, எருது விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, 200 காளை மாடுகள் பங்கேற்றன. இலக்‍கை குறைந்த நேரத்தில் அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்‍கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00