இந்தியன்-2 படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் - கிரேன் ஆப்ரேட்டர் கைது
Feb 21 2020 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள E.V.P. பிலிம் சிட்டியில் நடைபெற்றது. நேற்று முன்தினம் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில், உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.