தூத்துக்குடியில் பெண்களை விமர்சித்து வீடியோ வெளியிட்டவரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்
Feb 20 2020 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட இளைஞரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மருகால்தலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டார். இதனால் வேதனையடைந்த ஒட்டப்பிடாரம் பகுதிக்குட்பட்ட 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குறித்து இழிவாக வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.