குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவையில் நடைபெற்ற போராட்டத்தின்போது புதுமண தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது
Feb 20 2020 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது புதுமண தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. அங்குள்ள இஸ்லாமியர்கள் சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்துல்கலாம் - ரேஷ்மா ஷெரின் என்ற தம்பதியரின் திருமணம் நடைபெற்றது. சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி போராட்டக்காரர்களுடன் இணைந்து மணமக்களும் முழக்கங்களை எழுப்பினர்.