லண்டன் மியூசியத்தில் உள்ள திருமங்கையாழ்வாரின் சிலையை மீட்டு தமிழகம் கொண்டுவர மக்கள் கோரிக்கை
Feb 20 2020 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன திருமங்கையாழ்வாரின் சிலையை லண்டன் மியூசியத்திலிருந்து மீட்டு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கும்பகோணம் ஸ்ரீ சவுந்தராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்த திருமங்கையாழ்வாரின் பஞ்சலோக சிலை 60 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிலையில், லண்டன் அஸ்மோலின் மியூசியத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. சிலையை லண்டனில் இருந்து மீட்டு அதே ஆலயத்தில் வைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.