கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி - ஏற்பாடுகள் தீவிரம் : பிரையன்ட் பூங்காவில் மலர்ச்செடிகள் நடவு செய்யும் பணிகள்
Feb 20 2020 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடைபெறவுள்ள மலர்க்கண்காட்சியையொட்டி, மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானில், அடுத்த மாதம் 15ம் தேதி சீசன் தொடங்கவுள்ளது. ஜுன் மாதம் வரை நீடிக்கும் சீசன் காலத்தில், 59-வது மலர்க்கண்காட்சி பிரையன்ட் பூங்காவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பேன்ஸி, டேலியா, கிளையாடஸ், மேரி கோல்டு, ஆஸ்டெர் உள்ளிட்ட மலர்ச்செடிகள் ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் நடவு செய்யப்பட்டப்பின், அடுத்தடுத்து உரமிடுதல், களையெடுத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். புதிய செடிகளில் வண்ண மலர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து பூக்கத்தொடங்கும்.
பிரையன்ட் பூங்காவில் சீசனுக்காக வண்ண மலர்ச் செடிகள் நடவு பணி மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.