சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இளைஞருக்‍கு கொரோனா அறிகுறி - மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் 2 பேருக்‍கு வைரஸ் அறிகுறி இருப்பதால் தனி அறையில் வைத்து கண்காணிப்பு

Feb 20 2020 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்த பயணிகளை, அங்கிருந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பைப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வந்த விருதுநகரைச் சேர்ந்த இளைஞருக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து, இருவரும் பிரத்யேக அறையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00