சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறி - மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் 2 பேருக்கு வைரஸ் அறிகுறி இருப்பதால் தனி அறையில் வைத்து கண்காணிப்பு
Feb 20 2020 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்த பயணிகளை, அங்கிருந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பைப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வந்த விருதுநகரைச் சேர்ந்த இளைஞருக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து, இருவரும் பிரத்யேக அறையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.