தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் திடீர் துப்பாக்கிச் சூடு - தமிழக மீனவர் ஒருவர் படுகாயம் : ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பதற்றம்
Feb 20 2020 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒருவர் காயமடைந்தார்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 750-ற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், கடலுக்குள் சென்றனர். அவர்கள் அனைவரும் தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், திடீரென மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு மீனவர் காயமடைந்தனர். இதனால் அச்சமடைந்த சக மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படகு, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில், சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர். இது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.