சென்னை வளசரவாக்கத்தில் 131 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கு : கொள்ளையர்கள் 3 பேர் கோவையில் கைது
Feb 17 2020 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வளசரகவாக்கத்தில், பொறியாளர் வீட்டில் 131 சவரன் கொள்ளையடித்த வழக்கில், கோவையில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 28-ம் தேதி, ராதா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 131 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். கோவையில் பதுங்கியிருந்த முருகானந்தம், கோவூர் ஆனந்த், சங்கர பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 64 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.