பொதுத் தேர்தல் வரும்போது அ.ம.மு.க.வுக்கு நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் - திண்டிவனத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை - உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. அதிக வாக்குகளை பெற்றதாகவும் பெருமிதம்
Feb 17 2020 2:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுத்தேர்தல் வரும்போது அம்மா முன்னேற்றக் கழகத்திற்கு நிலையான சின்னமும் நல்ல கூட்டணியும் அமையும் என கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை தந்த கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரனுக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திரு. டிடிவி. தினகரன், பொதுத்தேர்தல் வரும்போது அம்மா முன்னேற்றக் கழகத்திற்கு நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. அதிக வாக்குகளை பெற்றதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.