பென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர்
Feb 14 2020 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய தேசியக் கொடி, தலைவர்கள் மற்றும் சாமி உருவங்கள் என, 250 -க்கும் மேற்பட்ட பென்சில் முனை சிற்பங்களை செதுக்கி, திருப்பூரில் பொறியியல் பட்டதாரி இளைஞர் அசத்தி வருகிறார்.
திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில் வசிக்கும் பிரகதீஷ் என்ற பொறியியல் பட்டாதாரி, மைக்ரோ ஆர்ட் எனப்படும், நுண்கலை சிற்பங்கள் செதுக்குவதில், பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்.
விநாயகர், முருகன் என சாமி உருவங்களும், அப்துல் கலாம், சர்தார் வல்லபாய் படேல், மாண்புமிகு அம்மா உள்ளிட்ட தலைவர்களின் உருவங்களையும், பென்சில் முனைகளில் சிறப்பான கலை நயத்துடன் செதுக்கி, அனைவரையும் அவர் வியப்பில் ஆழ்த்துகிறார்.