திருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
Jan 20 2020 8:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளில் 198 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அங்குள்ள 14 ஒன்றியங்களில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மோசடி குறித்து அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புகார் மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.