குடியிருப்பு பகுதியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடை பணியை நிறுத்தக்கோரி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்
Jan 20 2020 8:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியிருப்பு பகுதியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடை பணியை நிறுத்தக்கோரி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் மலையடிப்பட்டி பகுதியில் அமையவிருக்கும் இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.