திருப்பூரில் போலி பட்டா மாறுதல் தயாரித்து நில அபகரிப்பு : தி.மு.க. நிர்வாகி உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Jan 20 2020 8:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில், போலி பட்டா தயாரித்து நில அபகரிப்பு செய்ததுடன், ஆள்மாறாட்டம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தி.மு.க. நிர்வாகி உட்படோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் அருகே தெக்கலூர் கிராமத்தில் உள்ள சூரிபாளையம் பகுதியில், சென்னிமலை கவுண்டருக்கு சொந்தமான 3.20 ஏக்கர் நிலத்தை அவரது குடும்பத்தார் கவனித்து வந்துள்ளனர். அதில் ஒரு ஏக்கர் 7-செண்ட் நிலத்தை, தி.மு.கவை சேர்ந்த சந்திரசேகர் உட்பட 20 பேர், ஆள்மாறாட்டம் செய்தும், நேரடி கிரையம் செய்தது போன்று போலி ஆவணங்கள் தயாரித்தும் விற்றுள்ளனர். இதனால் தனது நிலத்தை மீட்டு தரக்கோரியும், மிரட்டல் விடும் தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.