பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர் வார எடுத்த நடவடிக்கைகள் என்ன? -வரும் 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Jan 20 2020 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர் வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் 5ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர் வாரக்கோரி ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் உஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் திரு.வினித் கோத்தாரி மற்றும் திரு.கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர் வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் 5ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.