சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பலமணி​நேரமாக நீடிக்‍கும் வாகன நெரிசல் - மதுராந்தகம் தொடங்கி பெருங்களத்தூர் வரை அங்குலம் அங்குலமாக வாகனங்கள் நகர்வதால் பொதுமக்‍கள் அவதி

Jan 20 2020 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொங்கல் பண்டிகை முடிந்து பல்லாயிரக்‍கணக்‍கானோர் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால், இன்று அதிகாலையிலிருந்து மதுராந்தகம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர் பகுதிகளில் வாகன நெரிசல் தொடர்ந்து நீடிக்‍கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பலரும் நேற்று மாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்த சென்னை நோக்‍கி புறப்பட்டனர். இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சாலை மார்க்கமாக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால், மதுராந்தகம் தொடங்கி தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அனைத்தும் அங்குலம் அங்குலமாக நகரும் நிலை நீடிக்‍கிறது. செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இதனைத் தவிர்க்க அங்குள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் கனரக வாகனங்களும், பேருந்துகளும் நெமிலிச்சேரி பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00