சிவகாசியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 3 கோடி ரூபாய் பட்டாசுகள் பறிமுதல் - 5 கிடங்குகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி
Sep 9 2014 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 5 லாரி செட்டுகளுக்கும் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
சிவகாசி நகரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பட்டாசு விபத்துகளை தடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, அங்குள்ள லாரி செட்டுகளில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், வருவாய் மற்றும் காவல்துறையினர் நகர் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 5 லாரி நிறுத்துமிடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, லாரி செட்டுகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், 3 கோடிரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளையும் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.