மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் மக்களுக்கு வழங்கும் பணி மும்முரம்
Nov 1 2014 7:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில், 3,100 பயனாளிகளுக்கு, 14 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரில் நடைபெற்ற விழாவில், ஆற்காடு திமிரி, வாலாஜாபேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட 8 ஒன்றியங்களைச் சேர்ந்த 1,454 பயனாளிகளுக்கு 6 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை அமைச்சர் திரு. கே.சி. வீரமணி வழங்கினார்.
குடியாத்தம் நகரில் நடைபெற்ற விழாவில், அணைக்கட்டு, மாதனூர், காட்பாடி உள்ளிட்ட 7 ஒன்றியங்களைச் சேர்ந்த 1,646 பயனாளிகளுக்கு 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடுவம்பாளையம், ஐயங்காளிபாளையம், விஜயாபுரம் உள்ளிட்ட 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 21,951 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை அமைச்சர் திரு. M.S.M. ஆனந்தன் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், 23 மாற்றுத் திறனாளிகளுக்கு 12 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 23 மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் மணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 378 மாணவ - மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.