தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கும், முதலமைச்சர் செயல்படுத்தி வரும் மக்கள்நலத் திட்டங்களுக்கும் கிடைத்துள்ள இந்த அமோக வெற்றியை அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில், அமோக வெற்றிபெற்ற கழக வேட்பாளர் திரு. கணபதி ப. ராஜ்குமாருக்கு அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற கழக வேட்பாளர், எம்.ஜி.ஆர் சிலைக்கும், அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தார். கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் திருமதி. A.P.R. அந்தோணி கிரேஸி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அமைச்சர் திரு. S.P. சண்முகநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி. சசிகலா புஷ்பா, திரு. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். கழகத் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தமிழக மக்கள் மீண்டும் அளித்துள்ள மகத்தான வெற்றியை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில், கழகத் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அமைச்சர்கள் திருமதி. பா. வளர்மதி, திருமதி. எஸ். கோகுல இந்திரா மற்றும் மகளிர் அணியினர் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
திருச்சி மாநகராட்சி மன்ற 15-வது வார்டு தேர்தலில் கழக வேட்பாளர் திருமதி. மு. ராஜலட்சுமி, 32-வது வார்டில் திரு.ஆர். சங்கர் ஆகியோர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன் மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மதுரை மாநகராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கழக வேட்பாளர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு மாநகராட்சி மேயர் திரு. ராஜன் செல்லப்பா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. S.T.K. ஜக்கையன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு உறுப்பினர் தேர்தலில், கழக வேட்பாளர் வெற்றி பெற்றதை, மேயர் திருமதி. மல்லிகா பரமசிவம், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
திருப்பூர் மாநகராட்சி 22 மற்றும் 45-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில், கழக நிர்வாகிகள், பார்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ராமநாதபுரம் நகரமன்றத் தலைவர் தேர்தலில், கழக வேட்பாளர் திருமதி. சந்தானலட்சுமி வெற்றிபெற்றதைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அ. அன்வர்ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினர்.
கடலூர் மாவட்டத்தில், கடலூர், விருத்தாசலம், நகரமன்றத் தலைவர் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை, கழகத் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகராட்சித் தலைவர் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.