ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய ஆ. ராஜாவை நீலகிரி தொகுதியில் வெற்றிபெற விடமாட்டோம் : இந்து முன்னணி அமைப்பு திட்டவட்டம்
Apr 24 2014 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராஜா, அங்கு வெற்றி பெற முடியாது என்றும், அவரைத் தோற்கடிப்போம் என்றும், இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
கோவையில் நேற்று பேட்டியளித்த, இந்து முன்னணி அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. காடேஸ்வரர் சுப்ரமணியன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்று, 2-ஜி அலைக்கற்றை இமாலய ஊழலில் ஈடுபட்டு நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியவர் ஆ. ராஜா எனக் கூறினார். இவ்வளவு பெரிய ஊழலை செய்துவிட்டு, மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடும் ஆ. ராஜாவை படுதோல்வியடையச் செய்வோம் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.