நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 105க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாய்கள் பங்கேற்றன
Jul 29 2014 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் விழாவையொட்டி நேற்று நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 105க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாய்கள் பங்கேற்றன.
குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் சாரல் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பனிபிரதேசத்தில் சறுக்கி செல்லும் வண்டியை இழுக்க பயன்படும் சைபீரியன் ஹஸ்க்கி, சிபிபாறை, பாக்ஸர், ராஜபாளையம், கிரேட்டர், லேபரடார் உள்ளிட்ட 19 வகையைச் சேர்ந்த 105 நாய்கள் பங்கேற்றன. இந்த கண்காட்சியில் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.