கோயில் நிலத்தை அபகரித்து, பொறியியல் கல்லூரி கட்டிய விவகாரம் - மு.க. அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்
Sep 2 2014 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோயில் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்து பொறியியல் கல்லூரி கட்டிய விவகாரம் தொடர்பாக மு.க. அழகிரி இன்று மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை பகுதியில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை, கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி, அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியும், போலி பத்திரங்கள் தயாரித்தும் தனது பெயருக்கு மாற்றி அமைத்து தயா பொறியியல் கல்லூரியை கட்டியிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அக்கல்லூரிக்கு நேரில் சென்று, விசாரணைக்கு பின்னர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டனர். கோயில் நிலத்தை அபகரித்தது தொடர்பாக மதுரை புறநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், மு.க. அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மு.க. அழகிரி இன்று மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி திரிவேணி முன்னிலையில் ஆஜரானார்.