கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்ற பலகோடி ரூபாய் கிரானைட் கற்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
Sep 19 2014 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருவுக்கு உரிய ஆவணங்கள் இன்றி, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சிங்காரிமேடு பகுதி அருகே, கிரானைட் கற்கள் ஏற்றிவந்த லாரிகளை வழிமறித்த அதிகாரிகள், அதனை சோதனை செய்தனர். இதில், உரிய ஆவணங்கள் இன்றி, கிரானைட் கற்கள் பெங்களூருவுக்கு கொண்டுசெல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, பலகோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களையும், லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.