இந்து இயக்கத்தினரை தரக்குறைவாகப் பேசிய ப.சிதம்பரத்தைக் கண்டித்து கோவையில் நூதனப் போராட்டம்
Sep 1 2014 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்து இயக்கத்தினரை தரக்குறைவாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தைக் கண்டித்து, கோவையில், இந்து மக்கள் கட்சியினர், நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், இந்து இயக்கத்தினர் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இந்து அமைப்புகளை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டதாகவும், இந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சிதம்பரத்தின் இந்த செயலைக் கண்டித்தும், அவரது கருத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், கோவையில், இந்து மக்கள் கட்சியினர், நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.