காவேரியில் நீர் வரத்து அதிகரிப்பு - ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 5-வது நாளாக தடை
Jul 22 2014 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரியில் விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் சுற்றுலாப் பயணிகளுக்கு 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக இந்த தடை நீடிக்கும் நிலையில், பரிசல் பயணம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு யாரும் செல்ல இயலாதபடி நடைபாதை மூடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, காவல் துறையினருடன் தீயணைப்பு வீரர்களும், ஊர்க்காவல் படையினரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.