முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட விவகாரம் - சென்னை நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மீது, மேலும் 2 வழக்குகள் தாக்கல்
Sep 23 2014 2:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக கருத்து வெளியிட்ட சுப்பிரமணியன் சுவாமி மீது சென்னை நீதிமன்றத்தில் மேலும் 2 அவதூறு வழக்குகள் அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளன.
தமிழக அரசுக்கும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட 2 கருத்துகளுக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சரின் சார்பில் வழக்கறிஞர் திரு.எம்.எல்.ஜெகன் தனித்தனியே மனுதாக்கல் செய்துள்ளார். அவதூறான கருத்தை தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமியை கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.