2013-14-ம் ஆண்டு தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 213 பேருக்கு நாளை மறுதினம் கலந்தாய்வு - ஒதுக்கீட்டு ஆணையுடன் வரவேண்டும் என பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
Sep 18 2014 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2013-14-ம் ஆண்டு தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 213 பேருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 213 பேருக்கும் அவரவர் மாவட்டங்களில் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த மாவட்டங்களில் பணியிடம் கிடைக்காதவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணிபுரிய விரும்புவோர்க்கும் நண்பகல் 12 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளவருபவர்கள், ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே வரவேண்டும் என்றும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், சாதிச்சான்று, இதர ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.