வாக்குப்பதிவு தினத்தையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திருக்கோயில்கள் சார்பில் பூரண கும்ப மரியாதையும், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது
Apr 24 2014 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாக்குப்பதிவு தினத்தையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு திருக்கோயில்கள் சார்பில் பூரண கும்ப மரியாதையும், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.
பைராகி மடம் வெங்கடேச பெருமாள் திருக்கோயில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் திருக்கோயில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், சிந்தாதிரிபேட்டை ஆதிகேசவபெருமாள் திருக்கோயில், முத்தையால்பேட்டை ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ணசாமி திருக்கோயில், மாம்பலம் கோதரண்டராம சுவாமி திருக்கோயில், எழும்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் ஆகியவற்றின் சார்பில் பூரண கும்ப மரியாதையும், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் பிரசாதமும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது.