கழகத் தொண்டர்கள் 5 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

Apr 23 2014 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல், ஈரோடு மாநகர், கோவை புறநகர் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தொண்டர்கள் 5 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பேரூராட்சியைச் சேர்ந்த கழக இளைஞர் பாசறை உறுப்பினர்களான திரு.S.பிரதீப்ராஜ், திரு.P.நாகராஜன் ஆகியோர் தேர்தல் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டனர் என்ற செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். தம் உயிரினும் மேலான தமதருமைக் கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என்று மீண்டும் தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

திரு.பிரதீப்ராஜ், திரு.நாகராஜன் ஆகியோரை இழந்து வாடும், அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளரும், தாராபுரம் நகர 27-வது வார்டு கழகச் செயலாளருமான திரு.K.S.R. பரஞ்ஜோதி, கோவை புறநகர் மாவட்ட மகளிர் அணித் தலைவர் திருமதி சரோஜினி மாணிக்கம், கடலூர் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. இராம. சுரேஷ்குமார் ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

திரு.பரஞ்ஜோதி, திருமதி சரோஜினி மாணிக்கம் மற்றும் திரு.சுரேஷ்குமார் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00