இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக்கூடாது என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறுதியான நிலைப்பாடு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், மாணவ-மாணவியர் பாராட்டு
Sep 20 2014 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்புக்கு பணிந்து, அவர் அறிக்கை வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு திரும்பப் பெற்றுள்ளதற்கு, தமிழறிஞர்களும், மாணவ-மாணவிகளும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இந்தி திணிப்பை எதிர்ப்பதில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடே இதற்கு காரணம் என அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.