கோவை மாநகராட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ரூ.1,550 கோடி செலவில் மழைநீர் வடிகால் வசதிக்கு ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா எழுச்சியுரை
Sep 16 2014 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சித் தேர்தலில், தேசியக் கட்சிகளுக்கோ, சுயேட்சை வேட்பாளர்களுக்கோ வாக்களிப்பதால், எந்தப் பயனும் ஏற்படாது என முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேசியக் கட்சிகளின் சிந்தனை டெல்லியில் உள்ள மத்திய அரசை சுற்றித்தான் இருக்குமே தவிர, தமிழ்நாட்டில் இருக்காது - தமிழ்நாடு பற்றிய சிந்தனையே தேசியக் கட்சிகளுக்கு இருக்காது என்கிறபோது, கோவை மாநகராட்சி மக்களைப் பற்றியா தேசியக் கட்சிகள் கவலைப்படப் போகின்றன? என, கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.