கொடைக்கானல், கும்பகோணம், கரூர் ஆகிய நகராட்சிகளுக்கு புதிதாக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 145 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

Aug 27 2014 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவரும் வகையில், 87 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கொடைக்கானல் ஏரி அழகுபடுத்தப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், கும்பகோணம் நகராட்சி மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும், 43 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளை மேற்கொள்ளவும், கரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 13 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதைகள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதிலும் தமது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் தலமாக விளங்கும் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று ஆண்டுகளில், 27 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், தெருவிளக்குகள் பொருத்துதல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் என 132 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன - எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன - கொடைக்கானல் நகராட்சியில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த தமது தலைமையிலான அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும் - கொடைக்கானல் நகர மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 43 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழ்குண்டாறு குடிநீர் திட்டம் தம்மால் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் நகராட்சியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதென தமது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது - இதன்படி, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 87 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடைக்கானல் ஏரி அழகுபடுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இத்திட்டத்தின் கீழ் ஏரியினை தூர்வாருதல், ஆகாயத் தாமரை மற்றும் தேவையற்ற நீர் தாவரங்களை அப்புறப்படுத்துதல், நீரில் உள்ள ஆக்ஸிஜன் தன்மையினை அதிகரித்தல், மீன் வளர்ப்பிற்கு தேவையான தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளர்.

மேலும், ஏரியினை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் வெளியேற்றுதல், கழிவு நீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலை வசதியினை மேம்படுத்துதல், அலங்கார தாவரங்களை அமைத்தல், வண்டல் படிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும் - இவை மட்டுமின்றி, படகு குழாம்களை முறைப்படுத்தி அழகுப்படுத்துதல், ஏரியின் எழில் தோற்றத்தினை மேம்படுத்துதல், சுற்றுலா தகவல் மையம், சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கோயில்கள் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம் நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில், 35 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் இதரப் பணிகள் என 234 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன - எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன - இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள மகாமகம் பெருவிழாவையொட்டி இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்ப் பணிகளும், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் மற்றும் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் - மேலும், 10 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேரோடும் வீதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார சந்துகளை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவறைகளை மேம்படுத்தும் பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலக்காவேரி ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும் - மொத்தத்தில் 43 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கரூர் நகராட்சியில், கடந்த 3 ஆண்டுகளில் 108 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பூங்காக்கள் என 608 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன - எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன - கரூர், இனாம் கரூர் மற்றும் தாந்தோணி பகுதிகளுக்கு ஜெர்மானிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் 68 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்தில் உள்ளன என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கரூர் நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவதென தமது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது - இதன்படி, கரூர் நகராட்சியில், குளத்துப்பாளையம் - ஈரோடு - கரூர் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் - இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும் - மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் - கரூர் நகராட்சியில் வடக்கு பசுபதி பாளையத்தில், திருச்சி மற்றும் கரூர் திண்டுக்கல் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் - இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும் - மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள், கொடைக்கானல், கும்பகோணம் மற்றும் கரூர் நகராட்சிகளைச் சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு நன்றி

கொடைக்கானல் எரியை சுமார் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுபடுத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அந்நகர மக்களும், சுற்றுலாப் பயணிகளும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். மேலும், முதலமைச்சரின் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. கொடைக்கானலின் இதமான சூழ்நிலையை அனுபவிப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏரியை அழகுபடுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 87 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இன்று ஆணை பிறப்பித்துள்ளார். இதனால், கொடைக்கானல் உலகின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக வளர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அறிவிப்பை பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், கரூர் நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ரயில்பாதை கடவுகளுக்குப் பதிலாக, சுரங்க வழிப்பாதை அமைக்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கரூர் நகர மக்களும், கழகத் தொண்டர்களும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்துகொண்டும் கொண்டாடினர்.

இதேபோன்று, கும்பகோணம் நகராட்சியின் வளர்ச்சிக்காக 43 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கும்பகோணம் நகர மக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். நகராட்சித் தலைவர் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00