முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு ஸ்வாஸ்நேகர் சந்திப்பு : மிகச் சிறந்த தலைவராகத் திகழ்பவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என அர்னால்டு பாராட்டு

Sep 16 2014 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சென்னை தலைமைச்செயலகத்தில், பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான திரு. அர்னால்டு ஸ்வாஸ்நேகர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில், தமிழகம், பல்வேறு துறைகளில் உலகஅளவில் முன்னணி வகிப்பதாக திரு.அர்னால்டு பாராட்டு தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான திரு. அர்னால்டு ஸ்வாஸ்நேகர் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. அர்னால்டு, புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் தமிழகம், உலக அளவில் முன்னணி இடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வகையில், பள்ளிக் குழந்தைகள், கல்வித் துறையில் சிறந்து விளங்க, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மிகச்சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் பாராட்டு தெரிவித்தார்.



முகநூலில் அர்னால்டு நெகிழ்ச்சி

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தது தனது வாழ்நாளில் அற்புதமான தருணம் என பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தனது முகநூலில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படங்கள் மூலம் உலக அளவில் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திய பிரபல நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ் திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்று சென்னை வந்தபோது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். முதலமைச்சருடனான சந்திப்பில் நெகிழ்ந்து போன அவர், அந்த சந்திப்பு குறித்து உடனடியாக, சமூக வளைதளமான அவரது முகநூலில் முதலமைச்சருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்னால்டு ஸ்வாஸ்நேகர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடனான சந்திப்பு அற்புதமான தருணம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் தலைமையிலான அரசின் வரலாற்று சாதனைகளையும், எதிர்கொண்ட சவால்களையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விரிவாக எடுத்துரைத்தது, நடிகராகவும், கவர்னராகவும் பணியாற்றிய தனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாகவும் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் தனது பதிவில் முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து அர்னால்டு வெளியிட்டுள்ள முகநூல் பதிவுக்கு, சர்வதேச ஊடகவியலாளர்கள், திரையுலகினர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்தும் தங்களது கருத்துகளையும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளனர். மேலும் அர்னால்டு முகநூல் பதிவை பல்லாயிரக்கணக்கான முகநூல் பதிவாளர்கள், தங்களது பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00