முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அவினாசி சாலை, LIC கார்னரில் அமைந்துள்ள திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல், வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, நேற்று பிற்பகல், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்றடைந்தார்.
பின்னர், அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் வழியில், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 106-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம், அவினாசி ரோடு, எல்.ஐ.சி. கார்னரில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். "பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 106-ஆவது பிறந்த நாள் விழா" சிறப்பு மலரையும் முதலமைச்சர் வெளியிட்டார். முதல் பிரதியை, கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான திரு. S.P. வேலுமணி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட. கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.