திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூரில் உள்ள துணை மின்நிலையம் 14.37 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் - சட்டப்பேரவையில் தகவல்

Jul 30 2014 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூரில் உள்ள துணை மின்நிலையம் 14.37 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விஸ்வநாதன், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூரில் உள்ள 33 KV துணை மின்நிலையம், 110 KV துணை மின்நிலையமாக 14 புள்ளி மூன்று ஏழு கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

ராஜபாளையம் முதல் திருவில்லிபுத்தூர் வரை, 25.7 கிலோமீட்டர் தொலைவிலான ஒருங்கிணைந்த புறவழிச்சாலை, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட பள்ளியாடியில், தொழில் முனைவோர் முன்வந்தால், நடைமுறையில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா திட்டத்தின்படி, புதிய ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திருமதி. கோகுல இந்திரா சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00